உங்களின் கல்லீரலை பலப்படுத்தும் சக்திவாய்ந்த மூலிகை டீ… இந்த மூலிகை வேறு ஒன்றும் இல்லை அதிமதுரம் தான். இது சற்று திராவகத்தன்மை வாய்ந்த மருத்துவ மூலிகை என்பதால் அதில் கிருமிகளை அழிக்கக்கூடிய சக்தி அதிகம் உள்ளது. மேலும் நாம் அதிமதுரத்தை அவ்வப்போது சிறிதளவு சாப்பிட்டு சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பலம் பெரும். உடலில் சேர்ந்திருக்கும் நச்சுத்தன்மைகளை நீக்கும். ரத்தத்தில் நோயெதிர்ப்பு தன்மையை மேம்படுத்தும்.
சிறுநீர்ப்பையில் இருக்கும் கிருமிகள் அழிந்து, புண்கள் ஆற்றும் அதிசய சக்தி அதிமதுரத்திற்கு உண்டு.சிறுநீரகங்களில் கற்கள் உருவாவதையும் அதிமதுரம் தடுக்கும்.எனவே தினமும் இந்த சக்திவாய்ந்த அதிமதுர மூலிகையை உணவில் சேர்த்து கொண்டு அதன் முழு பலன்களையும் பெற்று கொள்ளுங்கள்.உணவில் சேர்த்து கொள்ள விருப்பம் இல்லாதவர்கள் அதிமதுரத்தை தேநீரில் கலந்து குடிக்கலாம்.
அதிமதுர தேநீர் செய்வது எப்படி?
மூலிகை டீ செய்வதற்கு தேவையான பொருட்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அதிமதுரம் தூள் – 1 டீஸ்பூன்
தண்ணீர் – 1 டம்ளர்
நாட்டு சர்க்கரை – தேவைக்கு ஏற்ப
செய்முறை:
ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் நல்ல தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட வேண்டும். பின்பு அதனுள் அதிமதுரம் தூளை தூவி இரண்டு நிமிடங்கள் நன்றாக கொதிக்கவிட வேண்டும்.
தண்ணீர் கொதிக்க தொடங்கியதும் அதனுடன் நாட்டு சர்க்கரையை கொட்ட வேண்டும். அது கரைந்ததும் இறக்கி வடிகட்டி பருகலாம்.
இது தொண்டை வலி மற்றும் புண்ணை ஆற்ற உதவும். சளியையும் போக்கும்.உங்களின் கல்லீரலை பலப்படுத்தும் சக்திவாய்ந்த மூலிகை டீ… யார் யாரெல்லாம் பருகலாம் தெரியுமா?