திரையுலகில் நடிகைகளில் பலரும் இன்று சினிமாவில் அழகாக தெரிய வேண்டும் என்பதற்காக இப்போது தங்களின் முகங்களை ச ர்ஜரி செய்து கொண்டு மாற்றி வருகின்றார்கள். அதிலும் குறிப்பாக இந்தி சினிமாவில் அதிகமாக நடந்து வருகிறது. ஹிந்தி சினிமாவின் நடிகைகளில் பிரியங்கா சோப்ரா, ஸ்ரீதேவி, அனுஸ்கா ஷர்மா போன்ற பல நடிகைகள் பிளாஸ்டிக் சர்ஜெரி செய்துள்ளனர்.
மேலும் அந்த வரிசையில் பிரபல தொலைக்காட்சி சீரியல் நடிகையும், ஹிந்தி பிக்பாஸ் போட்டியாளருமான ஆஸ்கா கோராடியா என்ற பிரபலம் கடந்த 2016 ஆம் ஆண்டு தனது உதட்டை பிளாஸ்டிக் சர்ஜெரி செய்து கொண்டார்.
தொலைக்காட்சி நடிகையான ஆஸ்கா கோராடியா ‘நாகினி 2 ‘ தொடர் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தனது உதடு சிகிச்சைக்கு பின் அவர் உதட்டின் அமைப்பு ரசிகர்களின் மத்தியிலுமே கேலி கிண்ட லுக்கு உள்ளாகின. ஆனால் எந்த ஒரு விமர்சனத்திற்கும் நீண்ட காலமாக பதிலளிக்காமல் மௌனம் காத்து வந்தார்.
நடிகை ஆஸ்கா கோராடியா. கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது நீண்ட நாள் நண்பரான பிரென்ட் கோப்பல் என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை ஆஸ்கா கோராடியா.
சமீபத்தில் அவர் தனது அறுவை சிகிச்சை மீது வந்த பல விமர்சனங்கள் குறித்து பதிலளித்துள்ள நடிகை ஆஸ்கா கோராடியா எனது கணவர் என்னிடம் இருந்து மறைப்பதற்கு ஒன்றும் இல்லை என்பதை உணரவைத்து விட்டார். சிலர் என்னை அவமான படுத்தினாலும் அதை பற்றி நான் வெட்கப்படபோவதில்லை. என்று தெரிவித்துள்ளார்.