விக்னேஷ் சிவனுக்கு முன்பாக வலம் சிம்பு மற்றும் பிரபுதேவாவை காதலித்து நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஹாட் காதல் ஜோடிகளாக திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்த இரண்டு காதலை விட நயன்தாரா விக்னேஷ் சிவன் உடனான காதலில் தான் மிகவும் உறுதியாக இருந்து வருகிறார். மேலும் ,நடிகை நயன்தாரா எங்கு சென்றாலும் தனது காதலர் விக்னேஷ் சிவனை விட்டு செல்வதே இல்லை.
இத்தனை பிசியிலும் நடிகை நயன்தாரா தனது காதலருடன் ஊர் சுற்றுவதில் இருந்து மட்டும் அவர் தவறுவதே இல்லை. அடிக்கடி வெளிநாட்டிற்கு பறந்து செல்லும் இந்த ஜோடிகள் அவ்வப்போது அவர்களின் புகைப்படங்களை பதிவிட்டு தங்களது காதலை ரசிகர்களுக்கு அப்டேட் செய்து விடுகின்றனர்.
கிறிஸ்மஸ் கொண்டாட்டம், நியூ இயர் கொண்டாட்டம், நயன்தாராவின் பிறந்தநாள் கொண்டாட்டம் என்று அனைத்தையும் தவறாமல் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் வெளிநாட்டில் கொண்டாடினார். ஆனால், இவர்கள் இருவரின் திருமணம் எப்போது என்பது தான் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வரும் ஒரு விஷயம்.
ஜோதிடர் நயன்தாராவிற்கு திருமண தோஷம் இருப்பதாக சொல்லி அவரை காளஹஸ்தி சென்று வழிபட சொல்லியிருக்கிறார். அதனால்தான் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் நயன்தாரா பகவதி அம்மன் கோயில் திருச்செந்தூர் கோயில் என்று சென்றுள்ளார்கள். மேலும் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் சென்று வழிபட சொல்லி இருக்கிறார் அந்த ஜோதிடர். அவரின் அறிவுரையின்படி இருவரும் அந்த கோவிலுக்குள் செல்வதற்கு லாக்டவுன் அறிவித்து விட்டார்கள்.
எனவே லாக் டவுன் முடிந்ததும் அந்த கோவிலுக்கு சென்று ராகு பகவானை தரிசித்து விட்டு வந்த உடன் கூடிய விரைவில் நயன்தாராவின் திருமணம் நடைபெறும் என்றும் விரைவில் அந்த வகையில் இவர்கள் இருவரும் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபடும் போது நயன்தாராவை பார்த்த மூதாட்டி ஒருவர் நயன்தாராவின் கையை பிடித்தார். அப்போது கொஞ்சம் ஷாக்கான நயன்தாரா, பின்னர் அந்த மூதாட்டியை பார்த்து புன்னகைத்து கையெடுத்து கும்பிட்டு விட்டு அங்கிருந்து சென்றார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது..