கன்னி ராசி படத்தை இயக்கி அதன் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் தான் பாண்டியராஜன். இதன்பின் வெளிவந்த ஆண் பாவம் படத்தின் மூலம் நடிகராக என்ட்ரி கொடுத்தார். இதனை தொடர்ந்து இயக்குனராகவும், நடிகராகவும் நிறைய படங்களில் பணிபுரிந்துள்ளார். நடிகர் மற்றும் இயக்குனரான பாண்டியராஜனுக்கு கடந்த 1986ஆம் ஆண்டு திருமணம் ஆனது.
இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நடிகர் பாண்டியராஜன் தனது இரு மகன்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகிறது. இதில், மூத்த மகன் பிரிதிவிராஜன் தமிழில் வெளிவந்த சில திரைப்படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.