2 சாமந்திப் பூவை கசாயம் செய்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து கலந்து அருந்தினால் மலச்சிக்கல் உடனடியாக தீரும். உடல் சூடானால் பல நோய்களுக்கு ஆளாக நாம் நேரிடலாம். இத்தகைய உடல் சூடு மாற செவ்வந்திப் பூவை கசாயம் செய்து அருந்தி வந்தால் உடல் சூடு டக்கென்று நீங்கும்.

சிலருக்கு எவ்வளவுதான் உணவருந்தினாலும் உடல் எடை கூடாமல் என்றும் மெலிந்தே இருப்பார்கள். எப்போதும் சோர்வாக தான் தோன்றுவார்கள். இவர்கள் சாமந்திப் பூவின் இதழ்களை வெயிலை காயவைத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். அடிக்கடி சோர்வு ஏற்படாது.
சாமந்திப் பூக்கள் 20 எண்ணிக்கை எடுத்து தண்ணீரில் நன்றாக ஊறவையுங்கள். 5 முறை தண்ணீரை மாற்றிக் கொண்டே இருங்கள். பிறகு அதை வடித்து, பூக்களை மட்டும் நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதை, சீயக்காயுடன் கலந்து தலையில் தேய்த்துக் தினமும் குளியுங்கள். தலை அரிப்பு, பொடுகு, முடி கொட்டுவது போன்ற எக்கச்சக்கமான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.